வெள்ளி, 31 அக்டோபர், 2014


ஒல்லி ஒல்லி உடம்பே…..

விதவிதமான உணவுகள், வாயில் நுழையாத பெயர்கள், அவற்றை சாப்பிட்டால் மட்டுமே, நீங்கள் வழ்கையில் உயர்ந்த தராதரம் கொண்டதாக விளம்பரங்கள், இதில் ஆண்,பெண்,குழந்தைகள் என்ற அனைவரும் சாப்பிடலாம் இதில் சில வருடங்கள் கழித்து உங்களது எடை குறைய வேண்டுமா? நீங்கள் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டாம்.ஆனால் ஒரே மாதத்தில் உங்கள் எடை குறைந்து விடும். இதனால் மக்களும் தங்கள் எடையை குறைக்க முயற்ச்சிப்பார்கள்.

இந்த எடை குறைவு பொருட்களின் கம்பெனிகள் எப்படி வாடிக்கையளர்களை பிடிக்கிறார் என்றால், உங்கள் உடம்பில் கொளுப்பு எவ்வளவு உள்ளது என்று நாங்கள் இலவசமாக பரிசோதிக்கிறோம் என்று உடம்பில் உள்ள கொளுப்பின் அளவு சொல்லுகிறார்கள். இதோ டு இப்படியே விட்டால் நுரையீரல், இருதயம், பாதிக்கும் என பயமுறுத்துகின்றன.

இதற்கு மேல் REALITY SHOW,ஓல்லி பெல்லி நிகழ்ச்சி, இதிலும் லாப நோக்கம் இப்படி தொடர்ச்சியன நிகழ்ச்சியாகவே இருக்கிறது. இங்கே வியர்வை மூலம் எப்படி நமது எடை குறைகிறது என்று பார்ப்போம்.     நுரையிரல்கலில் இருந்தும் சருமத்திலிருந்தும் தண்ணீர் ஆவியாதல் சுற்றியுள்ள ஆகாய வெப்பம் 40சி-50சி ஆக இருந்தாலும் நமது உடல் வெப்பம் 37சிக்கு பேணப்படுகிறது.
ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது வியர்வை மிகவும் மெதுவாக ஆவியாகிறது, பெரிய துளிகளாக வழிவதன் மூலம் எந்த பயனும் இல்லை  ஏனெனில் அவியாகமல் குளிர்ச்சிகிடையாது இதனால்தான் புழுக்கமான வெப்பமண்டல காடுகளில் உள்ளதைவிட உலர்பாலைவனங்களில் வெப்பத்தை தாங்க முடிகிறது.
         மனித உடல் எடையில் நீரின் பங்குமனித உடல் எடை நிரந்தரமாக வேறுபட்டுக்கொண்டே இருக்கும், திடீரென்று எடை அதிகரிக்கும் காரணமாக உணவுகள் தவிர பல அம்சங்கள் எடையை நிதானமாகவும்,அதிகரிக்கவும்,குறைக்கவும் செய்கின்றன.

சண்டோரியோ சாங்க்டோரியஸ்(1561-1639)

இதை முதலில் கண்டறிந்தவர் 300ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு இத்தாலிய டாக்டர்.சண்டோரியோ சாங்க்டோரியஸ்(1561-1639) இவர் கலிலியோ கல்லூரியின் பேராசிரியர், இவர் இதற்காக பலமணி நேரங்களை தனது மாறுபடும் எடையை ஆராய்ந்தார். அவருடைய ஆரய்ச்சி முடிவில் ஒரு இரவில் அவர் 1(கி.கி) வரை எடை இழந்தார். 

24மணி நேரத்தில் வெளியாகும் காரியஅமில வாயு மூலம் 70-80(கி.கி) வரை எடை இழக்க முடியும். 24மணி நேரத்தில் நுரையீரல் மூலம் 150-500கி வரை குறையும்.வியர்வையின் மூலமான எடை இழப்பு மிகவும் அதிகம்பெருந்துளிகளாக இல்லாமல் போனால் கூட ஒரு மனிதன் எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்கிறான்.

அதாவது தோலின் மேற்புறத்தில் பரவிக்கிடக்கும் எண்ணிலங்கா வியர்வைச்சுரப்பிகள் மூலம் மிக நுண்ணிய துளிகள் (உருப்பெருக்கியின் மூலமே காணமுடியும்) இருந்து கொண்டிருக்கும்.


காற்று உலர்ந்தாக இருந்தால் வியர்வை வெளிப்படும் முன் ஆவியாகிறது. அதனால் தோல் உலர்ந்து காணப்படுகிறது. குளிர்ந்த வானனிலையின் போது 250-1700கி வரை தண்ணீர் வியர்வையின் மூலம் வெளியேறுகிறது உலர்ந்த வெப்பமான நிலையின் போது கடின உழைப்பாழி உடலில் 10-15 லிட் வியர்வை வெளியேறுகிறது.
வியர்வையின் பணி;
           மனிதனின் உடலில் வெப்பநிலை வியர்வையின் மூலமே சமநிலை அடைகிறது. ஒரு லிட்டர் வியர்வைக்கு 600 கலோரிகல் என்ற அளவில் உஸ்ணம் ஆவியாகும் போது பயன்படுத்துகிறது.
.அதிகமாக வியர்த்து தாங்க முடியாத அளவில் தாகம் ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் தண்ணீரை குடித்து சரி செய்ய வெண்டும் இல்லாவிடில் உயிரை பாதிக்கும்.

வியர்வையில் உள்ள தண்ணீர் எங்கிருந்து வருகிறது மனிதன் அருந்தும் தண்ணீர் எங்கு சேகரிக்கப்படுகிறது. மனிதனின் வியர்வை சுரப்பியில் இருக்கும். இரத்தத்திலிருந்து பெறப்படுகிறது. அதிகமான வியர்வை உண்டாகாதவரை  இரத்தம் பருமனாமடைவதில்லை பரிணாமமும் குறைவதில்லை,

இரத்தத்திலிருந்து தண்ணீரின் அளவு குறையும் போது சேமிப்புகளில் (தண்ணீர், தசை, திசு, பல உறுப்புகள்) இதனால் உடல் பருமன் உள்ளவர்களை வியர்வை வழிய உடல்பயிற்சிகளையும், மேற்கொள்ளச் சொல்கிறோம் இதனால் கொளுப்புகல் கரைக்கப்படுகின்றன 

ஒருவர் ஒல்லியாவதும் குண்டாவதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கவளையொன்றும் கிடையாது கையில் இருக்கும் பணத்தை பரிக்கும் ஒரு வர்த்தக் யுத்தியே இதை புரிந்துகொள்ளாத யாரும் முதளாளித்துவ நிருவனமயம் ஆக்கபட்டிருக்கும் சந்தை கலச்சார வலைபின்னலில் இருந்து தப்ப முடியாது….


கிராமத்து வாழ்க்கையில் இப்பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை நகரத்து மேச்சலில் தான் சிக்கல், ஆகையால் குண்டாகத்தான் பணம் தேவையேஒலிய, ஒல்லியாக தேவையில்லை, காசுக்காக தன்னை எந்த விலைக்கும் விற்று கொள்ளும் சந்தை பன்பாட்டில் எது மருத்துவம்? யார் மருத்துவர்? என்பதை தேடுவோம் இத்தேடல் நிச்சயமாக எடை இழக்கச்செய்யும்….
 கட்டுரையாளர்                                        மருத்துவர்

  கல்பனா           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக